
இந்த அறிமுக நிகழ்வில் பேசிய டைட்டன் நிறுவனத்தின் ஆபரணப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி திரு. அருண் நாராயண் (Arun Narayan, Chief Executive Officer, Jewellery Division, Titan Company Limited), தனிஷ்கின் வெற்றிகரமான பயணத்தில் தமிழ்நாட்டிற்கு எப்போதும் ஒரு சிறப்புமிக்க இடம் உண்டு.
இப்பிராந்தியத்தின் செழுமையான பண்பாட்டுப் பாரம்பரியமும், வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் நவீன விருப்பங்களும் எங்களது ஆபரண வடிவமைப்புத் தத்துவத்திற்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன.
தென்னிந்திய சந்தைக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள தனிஷ்கின் முதல் அன்கட் வைர ஆபரணத் தொகுப்பான **“நறுமுகை”**யை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.